கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது! (PHOTO)

Spread the love

கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி, மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற நாளை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

இன்று பாராளுமன்றத்தில் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட எம்.பி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மருதங்கேணி அழைத்து வர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி சிவில் உடையில் வந்த பொலிசார் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிஸ்ரல் காட்டி மிரட்டியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.