ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ,இரண்டு லொறிகளுக்குள் மறைந்திருந்து கங்கேரிக்குள் நுழைய முயன்ற 27 அகதிகள் மடக்கி பிடிக்க பட்டனர் .
இவ்விதம் அகதிகளாக நுழைய முயன்ற பங்காளதேஸ் ,இலங்கை மற்றும் எரித்திரியாவை சேர்ந்த அகதிகள் கங்கேரிய காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இதில் இலங்கையை சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு லாரிகளும் தடுத்து வைக்க பட்டுள்ளன .
கம்பிகள் மற்றும் உலோகோங்கள் ஏற்றப்பட்ட லொறிக்குள் மறைந்திருந்து பயணிக்க முயன்ற பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .