எனது உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை

எனது உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை
Spread the love

எனது உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மேக்னா நாயுடு. தமிழில் வீராச்சாமி, வைத்தீஸ்வரன், வாடா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் குட்டி, சிறுத்தை, புலிவேஷம், இளமி ஊஞ்சல், தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டமும் போட்டிருக்கிறார்.

சமீபத்தில் மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், எங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருக்கிறது. என்னுடைய வீட்டை நாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்து கொண்டிருந்தார்.

தன்னை துணை நடிகர் என்று கூறியதால், எங்கள் வீட்டை ஒரு தம்பதியர்களுக்கு வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். இந்நிலையில், திடீரென இரவோடு இரவாக அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் நான் வைத்திருந்தேன். அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் திருடிவிட்டு சென்றுள்ளனர். என்னுடைய உள்ளாடையை கூட விட்டுவைக்கவில்லை என்று நடிகை மேக்னா நாயுடு கூறியுள்ளார்.