எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா .

Spread the love

எச்சரிக்கையுடன் இருந்தும் பாதிக்கப்பட்டேன்… சுனைனா .

கொரோனா 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றுப் பரவலைக்

கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. பல மாநிலங்கள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

இந்த தொற்றால் சினிமா நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை

சுனைனாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழில், காதலில் விழுந்தேன், மாசிலாமணி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

சுனைனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்து சுனைனா டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

‘பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டின் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்

குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ள வில்லை என்பதால் அவர்களும்

தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்’எனக் கூறியுள்ளார்

    Leave a Reply