உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்
Spread the love

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் நேற்று (10) இரவு அவரது மகனின் கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மிக மோசமாக சென்றதையடுத்து, சுமார் 300 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அதுல சேனாரத்ன தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை தாக்கி சேதப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

பின்னர் பேராதனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அதுல சேனாரத்ன சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும், அவரது மகன் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் அதுல சேனாரத்னவின் மனைவி மற்றும் வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.