ரோட்டரி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்

ரோட்டரி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்
Spread the love

ரோட்டரி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்

உலகின் பிரபல அரச சார்பற்ற அமைப்பான ரோட்டரி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் ஜெனீபர் ஜோன்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இலங்கை மக்களுக்கான சில அபிவிருத்தித் திட்டங்கள் அவரின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இலங்கையர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதே இந்தவேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இலங்கைக்கான இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜெனிபர் ஜோன்ஸ் உத்தியோகபூர்வமாக பல முக்கிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்.

இலங்கையின் அழிந்துபோன வனப்பகுதியை மீண்டும் வளர்ப்பதற்காக ரோட்டரி ஒரு மில்லியன் மரங்கள் திட்டத்தை ஆரம்பித்துவைப்பார்.

பாலின பன்முகத்தன்மை மற்றும் கூட்டாண்மை உலகில் உள்ளடங்கிய முடிவெடுப்பதை உள்ளடக்கிய தனியார் துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்பின்


முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக அவர் பின்னர் இலங்கையின் பங்குச் சந்தைக்குச் செல்வார்.