இலங்கையில் 54 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாயம் இரு மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
Spread the love

இலங்கையில் 54 பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் எட்டு மாவட்டங்கள் உட்பட்ட 54 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, கொழும்பு, கேகாலை, ஹம்பாந்தோட்டை, கண்டி, குருநாகல், மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை (11) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது

வீடியோ