இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத்
தரவில்லை எனத் தெரிவித்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்,
பஷில் ராஜபக்ஸ, ஆனால் இலங்கைக்கு வருகைத்தந்த 12,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் சிக்கியுள்ளனரென, தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம் இந்த
மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் இந்நடவடிக்கை உத்தியோகப்பூர்வமாக நடைபெறாவிட்டாலும் உரிய
பரிசோதனைகளின் பின்னர், அடுத்த வருடம் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து உரிய சுகாதார பரிந்துரைகளின் கீழ், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அழைக்கப்படுவர் என்றார்