இலங்கையில் அதிகரித்த கொரனோ நோயாளர்கள்

Spread the love

இலங்கையில் அதிகரித்த கொரனோ நோயாளர்கள்

நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, கொரோனா

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152 ஆக அதிகரித்துள்ளது.

மாலைத்தீவிலிருந்து நாட்டிற்கு வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று

உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்த 2,951 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

194 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply