இறுதிவரை இவனே துணை
கருணை கொள்வான் கடவுளை நம்பு
காலை மாலை அவனை வணங்கு
நெஞ்சின் நெருடல் வருடி எறிவான்
நேசம் ஊட்டி மகிழ்வை தருவான்
சொல்லும் செயலும் அவனே தருவான்
சொன்னதை செய்யும் அருளும் புரிவான்
தனிமை விலக்கி தாயாய் மலர்வான்
தகமை அளித்து உலகை தருவான்
கண்ணின் ஒளியாய் அவனே இருப்பான்
கடினம் இலகு இரண்டும் தருவான்
தெளிந்து நிமிர தெளிதல் புரிவான்
தெவிட்டா திருக்க தேடுதல் அளிப்பான்
மலர்ந்த அகமது மன்றில் தருவான்
மலரும் சேவை முதலே இடுவான்
மடியும் வரையில் இவனை நினைப்பாய்
மனதில் நின்மதி பெற்று வாழ்வாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-12-2023