இரத்மலான வைத்திய மத்திய நிலையமொன்றுக்கு பூட்டு

Spread the love

இரத்மலான வைத்திய மத்திய நிலையமொன்றுக்கு பூட்டு

இரத்மலான- கிரிவத்துடுவ பிரதேச வைத்திய மத்திய நிலையமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளதுடன், அங்கு

கடமையாற்றிய வைத்தியர் உள்ளிட்ட மூவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி ​அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர், இந்த வைத்திய மத்திய

நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுள்ளதாலேயே குறித்த வைத்திய மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் ​தொழில்புரியும் நண்பரொருவரின் திருமணத்தில்

கலந்துகொண்டதுடன், 12ஆம் திகதி இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply