இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்
சுமார் 200 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை கடத்திச் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகனத் திருட்டு தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி, 6 சந்தேக நபர்களை கைது செய்ததை அடுத்து இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று (27) , மணிப்பூர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
நேற்றிரவு 7.00 மணியளவில் சுமார் 200 ஆயுததாரிகள், பொலிஸ் அதிகாரியின் வீட்டைச் சுற்றி வளைத்து, பொலிஸ் அதிகாரியையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்
அதன் பின்னர், உடனடியாக செயற்பட்ட அந்நாட்டு இராணுவத்தினர் ,அந்த கும்பலை துரத்திச் சென்று கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் வைக்க இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.