ஆபத்தாக மாறும் கொரனோ – ஆட்சி கவிழும் அபாயத்தில் ஆளும் அரசு
இலங்கையில் தற்போது உக்கிரப் பெற்றுள்ள கொரனோ நோயினது தாக்கம் பல்கி பெருகி செல்கிறது,
மக்களை துரத்திய கொரனோ தற்பொழுது இராணுவத்தை துரத்தி செல்கிறது .
இதுவரை கசியும் உள்ளக தகவலின் அடிப்படையில் 1,400 இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் ,அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இந்த நோயினால் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டது ,இவ்வேளை மக்களுடன் மிக நெருக்கமாக இராணுவத்தினர்
நெருங்கி பழகினார் ,அவர்களுக்கான உதவி பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார் ,ஒரு குடுப்பதிற்கு ஐந்தாயிரம் ரூபா விகிதம் பணம் வழங்க பட்டது
அது தவிர வட்டி தள்ளுப்படி ,என பல சலுகைகளை கோட்டபாய அரசு அறிவித்தது .
இது பல்லின மக்களுக்கும் கோட்டபாய மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது
இனவாதியாக இருந்தாலும் நல்லது செய்கின்றார் என்ற மனோ நிலைக்கு தமிழர்கள் மாற்றம் பெற்றனர் ,பலருடைய உதடுகள் இதனை உறுதி செய்தன
ஆனால் தற்போது பயண படும் கள நிலவரம் கோட்டபாய ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்று விடும் அபாயம் எழுந்துள்ளது
பாராளு மன்ற தேர்தலை ஜூன் மாதம் முன்னர் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளார் ,
தனி பெரும்பான்மையுடன் கூட்டணி இன்றி ஆட்சி அமைக்க இது நல்ல சந்தர்ப்பம் என கணக்கு போட்டார் ,அது இப்பொழுது கேள்வியாக மாறியுள்ளது .
நாட்கள் கடந்து செல்லின் அடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்ட தொடர் வருகிறது, அதனை எதிர்கொள்ள வேண்டும்
,ஆகையால் விரைந்து தேர்தலை எதிர்நோக்க வேண்டும் ,அதற்கு இந்த கொரனோ கோட்டாவுக்கு வழிவிடுமா …?
என்ற அச்சத்துடனே இப்பொழுது ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர் .கொரனோவால் கோட்டாவுக்கு வந்த சோதனை ..!