ஈராக்கில் -அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் கொல்ல படுவர் -ஈரான்
ஈராக்கில் வைத்து அமெரிக்கா படைகளினால் படுகொலை புரிய பட்ட ஈரான் நாட்டு இராணுவ தளபதி காசிம் சுலைமானியின் மகள், தந்தையின் இறுதி கிரியை
முடிவுற்ற பொழுது
இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க படும் என சூளுரைத்துள்ளார் .
அத்துடன் ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் குடும்பங்கள் ,மற்றும் அவர்களது பிள்ளைகள் கொலை
செய்யப்படுவார் ,இதற்கு துணை போன இஸ்ரேலும் இதற்குரிய தண்டனையை பெற்று கொள்ளும் .
இவர்களுக்கு இப்பொழுது இருந்தே இருண்ட தினம் ஆரம்பிக்க பட்டு உள்ளதாக சுலைமானியின் மகள் அதிரடி அறிவிப்பு செய்துள்ளார் .
ஈரான் நாள் தோறும் புதிய அறிவிப்புக்களை அமெரிக்காவிற்கு எதிராக அறிவித்து வரும் நிலையில்
அமெரிக்கா நேச நாடுகள் ஈரான் அடுத்து செய்ய போகும் தாக்குதல்களை எப்படி தடுப்பது .
மற்றும் எரிபொருள்கள் விலையை எப்படி கட்டு படுத்துவது என்பது தொடர்பில் பேசி வருகிறது .
போர்களை உருவாக்காகி நாடுகளை அடிமை படுத்தி அந்த நாட்டினது வளங்களை சுரண்டி வந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது பீதியில் உறைந்துள்ள .
அமெரிக்கா செய்த ஒரு படுகொலையால் இராய தந்திர நெருக்கடியை மேற்குலகம் சந்தித்துள்ளது ,
ஆனால் டிராம்போ தனத்து செயலை நியாய படுத்தும் வகையிலும் மேலும் நீங்கள் என்ன சொல்வது நாம் ஈரக்கை விட்டு வெளியேற மாட்டோம் என ஆடம் பிடிக்கிறது .
அவர்கள் மண்ணில் தங்கி இருந்து அவர்களுக்கு எதிராக செயல் பட்டவாறு அவர்களையே மிரட்டும் அமெரிக்காவின் இந்த செயல் உலக சமுதாயத்தை விழிப்புற செய்துள்ளது .
ஈரான் பழிவாங்கும் செயலில் தீவிரமாக செயல் பட முனைந்தால் அது மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பிக்கும் ஆத்திரம் ஊட்டும் செயல்கள் தோற்று விக்கும் என நம்ப படுகிறது .
மேலும் மத்திய கிழக்கில் முஸ்லீம் நாடுகள் ஒன்றினையும் ஒரு சந்தர்ப்பத்தை இது உருவாக்கி கொடுத்துள்ளது .
ஈராக்,ஈரான்,.கட்டார் ,லெபனான் ,துருக்கி ஆகியன ஒன்றாக இணைந்து செயல் படும் நிலையில் உள்ளன .
அப்படி என்றால் இங்குள்ள அமெரிக்கா படைகளை அகற்றும் நகர்வுகள் தீவிரம் பெற போகின்றன .
முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைவதை மேற்குலகமும் ,அமெரிக்காவும் விரும்பாது ,அதனை தடுக்க அவர்கள்
அங்கு மீளதொரு பயங்கரவாத குழுவை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளனர் .
பயங்கரவாதிகள் என அமெரிக்கா கூறுபவர்களுக்கே அவர்களே நவீன ஆயுதங்களை வழங்கி ஆயுத விற்பனையை துரித படுத்தியதுடன் ,நாட்டின் இயல்பு
வாழ்வை கெடுத்து அந்த நாடுகளில் முஸ்லீம்களை வைத்தே மோத விட்டுஅதே மக்களை வைத்தே பலியெடுப்பை நடத்தி வந்தது
அவற்றுக்கு இப்பொழுது முடிவு கட்ட வேண்டிய காலத்தை அமெரிக்காவே உருவாக்கி கொடுத்துள்ளது ,இது ஒரு
வரலாற்று பிழையாகவும் ,முஸ்லீமக்ளுக்கு சரியான தடத்தையும் வழி அமைத்து கொடுத்துள்ளது
- வன்னி மைந்தன் –