அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கைகள்

Spread the love

அடுத்த மாதம் முதல் பாடசாலைகளில் வழமையான கல்வி நடவடிக்கைகள்

அடுத்த மாதம் முதல் வழமைபோன்று பாடசாலைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, தரம் 10, 11, 12 மற்றும் 13 வகுப்புக்களுக்கான பாடசாலைக் காலம் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் காலை 7.30

தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாகும். இது தொடர்பில் கல்வி அமைச்சு அனைத்து மாகாண பிரதான செயலாளர்களுக்கும்,

மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள்

இம்மாதம் வரை மாத்திரம் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply