வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
மஹியங்கனை – தெஹியத்தகண்டிய பிரதான வீதியின் கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்வழியாக சென்ற ஒருவர் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிரந்துருகோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் மீட்கப்பட்ட சிசுவின் சடலம்
சடலம் மீட்கப்பட்ட போது அழுகிய நிலையில் இருந்ததால், சடலத்தை யாராவது அவ்விடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு பாடசாலை மற்றும் பேருந்து நிறுத்தமும் உள்ளதுடன் கருப்பு நிற பயணப்பையொன்றும் காணப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதுடன், கிராந்துருகோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
- உணவகங்களில் திடீர் சோதனை
- யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
- முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
- யாத்திரை சென்ற வான் விபத்து
- ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
- வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
- ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
- மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
- காணாமல் போன மாணவன்
- நாட்டில் பலபகுதிகளில் சீரற்ற வானிலை
- படகு சேவைகள் நிறுத்தம்