லண்டனில் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கண்டன ஆர்ப்பாட்டம்
பிரிட்டன் ,லண்டன் ; இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாதம் வலிந்து நடத்திய கருப்பு ஜூலை 39 வது ஆண்டு இனப்படுகொலையை நினைவு கூர்ந்து லண்டனில் மிக பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
சிங்கள பவுத்த இனவாத அரசினால் அப்பாவி தமிழ் மக்களின் அழிப்புக்கு நீதி வேண்டி கண்டன போராட்டம் இடம் பெறுகிறது .
பிரிட்டன் சட்ட விதிகளை பின் பற்றி அமைதியான முறையில் தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் அமைப்பினால் நடத்த பட்டது .
23/07/2022 இன்று மதியம் 1 மணிக்கு பிரித்தனியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் பிரித்தானிய காவல்துறையினர் முன்னிலையில் மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தினர்.
இதன் போது லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கறுப்பு ஜூலை கொலை வெறியின் நினைவு படங்ககளை தாங்கிய வண்ணம் போராட்டங்கள் இடம்பெற்றது .
லண்டனில் கறுப்பு ஜூலை 39 வது ஆண்டு இன படு கொலையை நினைவு கூர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வுகளை உள்ளே இருந்து ஜன்னல் வழியாக
சிங்கள அதிகாரிகள் படம் பிடித்ததாக பங்கு பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என இலங்கை இராணுவ தளபதி ஒருவர் சைகை மூலம் தெரிவித்து லண்டனை விட்டு தப்பி ஓடியமையும் சட்ட போராட்டம் இடம்பெற்றமையும் இங்கே குறிப்பிட தக்கது .
(லண்டன் போராட்டம் யாவும் –லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக என்பதில் அழுத்துவதன் ஊடாக பார்க்கலாம் )