காலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை
கொரோனா தொற்றாளர்களுக்காக, காலி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஹிக்கடுவ- ஆரச்சிகந்த வைத்தியசாலை, அம்பலாங்கொட,
கரந்தெனிய ஆகிய வைத்தியசாலைகள் கொரோனா தொற்றாளர்களுக்கு
சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையின் பின்னர், இதுவரை காலி மாவட்டத்தில்
4,837 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன், 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.