ஈரானில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -12 பேர் காயம்
ஈரானில் -ஈரானிய இராணுவத்தால் உக்கிரேன் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து ,அதற்கு எதிராக
மக்கள் பெரும் போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்தி வருகின்றனர் .
இந்த போராட்ட காரர்கள் கலவரத்தை கட்டு படுத்த முடியாத இராணுவம் மக்கள் மீது துப்பாக்கி சூட்டை
நடத்தியது ,இதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கினறன் .
அமெரிக்கா,இஸ்ரேல் மற்றும் பல் நாட்டு படைகள் தூண்டுதலில் இந்த மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் மேற்குல சதியின் ஒரு அங்கமாக இது பார்க்க படுகிறது .பிரிட்டன் ஈரான் தூதுவர்
கைது செய்ய பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பெரும் சம்பவமாக இது பார்க்க படுகிறது
இந்த அத்து மீறல்களை அடுத்தும் மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இதே வேளை அமெரிக்கா
படைகள் மீது ஈரான் ஆதரவு படைகள் ஈராக்கில் தொடர் தாக்குதல்களை தொடுத்துள்ளது
,அதே போல அந்த நாட்டு அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துள்ளன .
ஈரான்,ஈராக் இரு நாடுகளும் செயல் இழந்து காண படுகின்றன ,எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற பீதியும் ,பதட்டமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது
ஈராக்கில் குண்டுகள் வெடிக்கின்றன ,பல மக்கள் ,மற்றும் இராணுவம் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறான சூழலில் மீளவும் ஈரான்
திசை திருப்பு தாக்குதல்களை அதன் ஆதரவு படைகள் ஊடாக தீவிரமாக நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது