இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .
வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .
விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .
இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .
சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .
பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .
அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .
மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .