புலிகளை உருவாக்கிய குற்ற சாட்டில் யாழ். முதல்வர் மணி கைது
தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்
யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு எட்டு மணிக்கு மணிவண்ணன், சபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்திருந்தனர்.
இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மணியைக்
கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக என வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை, பார்த்திபனிடம் சுமார் எட்டு மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர்.