வீதி விபத்துக்களில் 12 பேர் மரணம்
மீண்டும் நாட்டில் விபத்துக்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நேற்று (08) மாத்திரம் விபத்துகளால் 13 மரணங்கள் நாட்டில் பதிவானதாக கூறிய அவர், அதில் 7 மரணங்கள் 24 மணித்தியாலங்களில் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஏனைய 6 மரணங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களால் காயமடைந்த நிலையில் நேற்று சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் பாதசாரிகள் என்றும், 4 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், சாரதிகள் இருவர் மற்றும் பயணி ஒருவர் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.