SP.பால சுப்ரமணியம் மரணம் – பேரதிர்ச்சி – தமிழிசை
பிரபல பின்னணி பாடகர், சகோதரர் திரு. SP.பால சுப்ரமணியம் அவர்கள்
மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது. தெலுங்கு மண்ணில் பிறந்து
தமிழ் மண்ணில் பிரபலமடைந்த SPB அவர்களை மண்ணுலகில் பாடியது
போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம்
அழைத்துக்கொண்டதோ? என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,திரை உலகினருக்கும்
மற்றும் ரசிகர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்
தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் அவரது குரல் விண்ணுலகில் ஒலிக்கும் என்றே ஆறுதல் அடைவோம்