வெள்ளத்தில் சிக்கி 31 பேர் மரணம் 100 பேரை காணவில்லை
ஆப்கனிஸ்தான் வடக்கு Parwan மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி, இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 100 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதினேழுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் ,இதுவரை மீட்க பட்டுள்ளனர்.
அடித்து பாயும் அகோர வெள்ளத்தில் சிக்கி ,வாகனங்கள் வீடுகள் உடைமைகள் என்பன , வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
காணாமல் போன நூறு மக்களை,தேடி கண்டு பிடிக்கும் பணிகள் முடுக்கி விட ப் பட்டுள்ளன.
வீடுகள் மற்றும் உடமைகளை இழந்த மக்கள், அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.
தமது உறவுகளை பறி கொடுத்த மக்கள் ,கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் உயிர் பலி, அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .