அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
அமெரிக்கா இராணுவத்தின், முக்கிய இராணுவ முகாம்கள் மீது ,உளவு விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளது .
ஈராக்கை விட்டு விலகிட மறுத்து வரும் ,அமெரிக்கா இராணுவத்தினர் மீது ,ஈரானிய ஆதரவு குழுக்கள் ,ஈரானிய உளவு விமானங்களை, பயன் படுத்தி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளன.
அமெரிக்கா இராணுவ தளம் மீது உளவு விமானம் மூலம் தாக்குதல்
சாமீப காலங்களாக ,அமெரிக்கா இராணுவத்தினர் , தரைவழி மற்றும் இராணுவ முகாம்கள் மீது ,ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் ,தாக்குதல்கள் நடத்த பட்டு வருவது அதிகரிக்க பட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தை ,ஈராக்கில் இருந்து அகற்றும் தொடர் தாக்குதலாக இவை பார்க்க படுகிறது.
தொடரும் உக்கிர தாக்குதல்களினால் ,அமெரிக்கா இராணுவத்தின் உளவு உரனில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது .,என முக்கிய உளவு நிறுவனங்கள் கருத்துரைத்துள்ளமை குறிப்பிட தக்கது .
எனினும் ,இன்று நடத்த பட்ட, இந்த விமான தாக்குதல்களில், அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட ,சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை .
அமெரிக்கா இராணுவத்தினர் இலக்கு வைத்து ,துரத்தி துரத்தி தாக்க படுவதன் ஊடாக ,மிக தெளிவான செய்தி ஒன்றை போராளி குழுக்கள் சொல்லி கொள்கின்றன .
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் அதன் சார்பு கூட்டணி நாடுகள் ,தங்கி இருக்கும் வரை ,எமது தாக்குதல்கள் விரிந்து பரந்து செல்லும், எனற களத்தை இவை காட்டி கொள்கின்றன .
இதன் உள்ளக போரியல் தந்திரமும் ,அதற்குள் சிக்க வைக்க படும் அமெரிக்கா இராணுவத்தின் மன நிலைகளையும் ,படம் பிடித்து காட்டும் நிகழ்வாக இது அமைய பெற்றுள்ளது .
சதாம் உசேன் அணுகுண்டு தயாரிக்கிறார் என பொய்யை கூறி ,எண்ணெய் வளங்களை ஆக்கிரமிக்க ,நுழைந்த அமெரிக்கா இராணுவம் ,அழகிய ஈராக் நாட்டை போர் மேகம் கொண்ட நாடக மாற்றியுள்ளது .
இதன் ஊடாக அந்த ஈராக் மக்கள் ஒற்றுமை சிதைத்து ,அந்த நாட்டை தமது ஆளும் அதிகாரத்தின் கீழ் அடக்கியாள துடிக்கும் அமெரிக்காவை இந்த போராளிகள் துரத்தி தாக்குவது சரி தான் என்கிறது ஒரு தரப்பு .
ஈரான் ஆதரவுடன் நடத்த பட்டு வரும் இந்த தாக்குதல்கள் விரைவில் வீச்சு பெறும் என எதிர் பார்க்க படுகிறது .