இதயமதை தந்து விடு..!
உன் நினைவை எடை போட்டு
ஒரு போதும் விற்கேண்டி
என் அன்பை நீ பறித்து
எறிந்து போக வேணாண்டி
சுற்று மதில் கட்டி வைத்து
சுற்றம் வீடு காப்பது போல்
ஆடையில் உனை மறைத்து
அழகு மயில் போவதெங்கே
புத்தகத்துள் மயிலிறகை
பூட்டி வைத்து காத்தது போல்
பூவே நெஞ்சுக்குள்ளே
பூட்டி வைத்து பார்கிறேண்டி
காகிதத்தில் கப்பல் செய்து
கடல் அலையில் விட்டேண்டி
கரை வந்து சேரலையோ
கண்மணிக்கு கிடைக்கலையா
ஐந்து விரல் பந்தியிலே – உனை
அப்படியே பதிந்தது
அதையெடுத்து அதையெடுத்து
அப்படியே ஒத்தி விடு
இமை மூடா இன்றுவரை
இளங் குயிலே உறங்குகிறேன்
இன்றாவது வந்தெனக்கு
இதயமதை தந்து விடு
தத்தளித்து தத்தளித்து
தண்ணீரில் தவிக்கின்ற
கப்பலாக ஆகிவிட்டேன்
கரையேற்றி விட்டு விடு
வாடகைக்கு வீடெடுத்து
வாசலிலே காத்திருக்கேன்
வாடாமல் எனை மணக்க
வாசலுக்கு வந்து விடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-02-2022