7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை.

Spread the love

7 ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை.

கொவிட் – 19 தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியினை கொவிட் – 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பெர்ணான்டோப்பிள்ளை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள ஏழு ஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் – 19 சிகிச்சை நிலையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையினை மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எடுத்துள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கிழக்கு மாகாணத்திலுள்ள 283 கொரோனா நோயாளிகளுக்காக இந்த ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை வேரண்கரகொட மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் 30 பேருக்கும் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும் அட்டாளைச்சேனை தள வைத்தியசாலையில் 30

பேருக்கும் சிகிச்சை திருகோணமலை, கப்பல்துறை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் 50 பேருக்கும், நிலாவெலி ஆயுர்வேத வைத்தியசாலையில் 48 பேருக்கும், மட்டக்களப்பு,

புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியசாலை 60 பேருக்கும், எறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் 30 பேருக்கும், சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Leave a Reply