6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

Spread the love

6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப்

பயன்படுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க மற்றும் ஏனைய 5 பேரையும் கைது செய்வதற்கு

கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு

எவ்வித இடையூறும் இல்லை என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் தலைவர் நீதிபதி நவாஸ் தெரிவித்துள்ளார்.

மூவரடங்கிய நீதிபதிகள் குழு உறுப்பினர்கள் மூவரும் இனக்கப்பட்டதான் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

      Leave a Reply