37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்
Spread the love

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவில் பார்வையிழந்துள்ளதுடன் இருவர் பூரண பார்வை இழந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார்.

சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வந்தாலும் உண்மை நிலவரத்தை இங்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற அவர், கண்களுக்கு செலுத்தப்பட்ட மருந்துகள் வைத்தியர்களால் தவறாகியதாக நினைக்கின்றனர் என்றும் இதற்கான பொறுப்பை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

அரசின் நலனுக்காக தரம் தாழ்ந்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அவசர கொள்வனவு விலையில் பல வகையான மருந்துகள் கொண்டு வரப்படுவதாகவும் பெரும்பாலானவை தரமற்றவை என்றும் குறிப்பிட்டார்.

அவற்றில் ப்ரெட்னிசோலோன் கண் மருந்தும் ஒன்று என்றும் இனிமேல் இதுபோன்ற தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

37 கண் சத்திரசிகிச்சை: 2 பேர் முற்றாக பார்வையை இழந்தனர்

வைத்தியர்கள் என்று சொன்னாலும் சில இடங்களில் மனநோயாளிகள் போல நடத்தப்படுகிறோம் எனவும் இந்த நிலைமைக்கு இழுத்திருப்பது அரசாங்கமே என்றும் கூறிய அவர், வை்தியர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாததால் அவர்கள் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றார்.

சத்திரசிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எந்த இழப்பீடு நிவாரணமும் வழங்கவில்லை

இல்லை என்றும் இழப்பீடு வழங்கினாலும் அவை எவ்வளவு நாட்களுக்கு போதுமானது என்றும் கேள்வியெழுப்பிய அவர், அப்பாவி மக்களுக்கு இழப்பீடுக்கு அப்பாற்பட்ட ஒன்றை வழங்குவது கட்டாயமாகும் என்றார்.