24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Spread the love

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

இன்று (05) அதிகாலை முடிவடைந்த 24 மணிநேரத்தில் பொலிஸாரின் “யுக்திய” விசேட நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகளில் 1184 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின், 242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ், 06 கிலோகிராம் கஞ்சா, 7,772 கஞ்சா செடிகள், 03 கிலோகிராம் 694 கிராம் மாவா, 55 கிராம் ஹஷிஸ், 1,221 மாத்திரைகள் மற்றும் 1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

24 மணிநேரத்தில் 1184 சந்தேக நபர்கள் கைது

அத்துடன், 23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், போதைக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வீடியோ