20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு

Spread the love

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தற்போதைய

அரசியலமைப்பு மாற்றபட வேண்டும் என்பதை வழியுறுத்தி 1994 ஆம்

ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் தற்போதைய அரசியல் யாப்பை நிராகரித்துள்ளனர்.

விசேடமாக தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை முன்னிலைப்படுத்தியே வாக்களித்தனர்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை

நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கே வழங்குவதற்கு வழிவகை செய்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட

வேண்டும் இதனையே அனைத்து மக்களும் விரும்புகின்றனர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சரியான கொள்கைகளின் அடிப்படையில் நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply