1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

Spread the love

1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 66 அதிகாரிகள் உட்பட மொத்தம் 1,795 கடற்படை வீரர்களுக்கு பதவி

உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக டி சில்வா இதனை தெரிவித்தார்.

´சிலோன் ரோயல் நெவ்´ என்ற பெயரில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இலங்கை கடற்படை இந்நாட்டில் நிறுவப்பட்டது.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது கடற்படை சமுத்திர பாதுகாப்பிற்காகவும் கடல் ஊடாக இந்நாட்டிற்கு ஏற்படும்

அச்சுறுத்தல்களை தடுப்பதற்காகவும் பாரிய அளவான பங்களிப்பினை வழங்கிய கடற்படை தற்போது நில கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.

கடற்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலுக்கு முன் உள்ள கடல் பரப்பில் இடம்பெறவுளளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply