136 வெளிநாட்டவர் கைது

Spread the love

செல்லுபடியான விசா இன்றி இங்கு தங்கியிருந்த 136 வெளிநாட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய 5 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 6.00 மணி

வரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்திய பிரஜை 82 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த 12 பேரும், மாலைதீவைச் சேர்ந்த 10 பேரும், நைஜீரியா நாட்டவர் 8

பேரும், பங்களாதேஷ் நாட்டவர் 6 பேரும், சீனாவைச் சேர்ந்த 4 பேரும், கனடாவை சேர்ந்த 4 பேரும் அடங்கலாக மொத்தம் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த தினங்களில் 13 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பொலிஸார் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply