100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா – ஹட்டன் பிரதான சோட்கட் வீதியில், ரதல்ல கார்லிபெக் பகுதியில் பார ஊர்தி
ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் அதில் காயமடைந்த இருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (06) காலை 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்நறுவையில் இருந்து நுவரெலியாவுக்கு அரிசி கொண்டு சென்று, மீண்டும் பொகவந்தலாவை பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் பார ஊர்தி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து பார ஊர்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார், மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.