03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
நாட்டில் உள்ள 03 சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் இன்று (24) முதல் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை
மற்றும் மெகசின் சிறைச்சாலை ஆகியவற்றுக்கு இவ்வாறு பொலிஸ் விசேட
அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு
மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.