ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (20) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு
யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியுள்ளது.
தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கியுள்ளன. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபடுவதை
அவதானிக்க முடிந்தது.தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.
ஹர்த்தாலால் முடங்கியது யாழ் நகர்
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ப. சரவணராஜா, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பதவியிலிருந்து இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- துப்பாக்கிச் சூடு களுத்துறையில்
- இலங்கையில் துக்கதினம் பிரகடனம்
- சிறைக்கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
- உழவு இயந்திரம் கவிழ்ந்தது
- ISISசேர்ந்த இலங்கையர் இந்தியாவில் கைது
- இராணுவவாகனம் மோதி யுவதி பலி
- இலங்கை வருகிறார் எலோன் மஸ்க்
- சிக்கிய திருட்டு கும்பல்
- நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகளில் பின்னடைவு
- ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யார்