ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் விற்பனை செய்யப்படவில்லை – அரசு அறிவிப்பு
நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை விற்பனை
செய்ய முயன்றாலும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான
செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்று அமைச்சர் பிரசன்ன
ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் போது இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்கும் நிலையை
மாற்றியமைப்பதே சமகால அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அவர் கூறினார்.