ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்

வேலைத்திட்டம்
Spread the love

ஒரு இலட்சம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்

பொருளாதாரத்தை வலுவூட்டும் கிராமத்துடன் கலந்துரையாடல் வரவு செலவு திட்ட ஒரு இலட்ச வேலைத்திட்டம் இன்று (04) காலை 8.52 மணிக்கு நாடு முழுவதும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டத்திற்கு அமைவாக உற்பத்தி பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்குடன்

மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தேசிய வேலைத்திட்டம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய வகையில் 14 ஆயிரத்து 21 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கமைவாக ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவில் 5 தொடக்கம் 6 வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்

பிரிவுகளை கேந்திரமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் தமது தேவையை அவர்களினாலேயே அடையாளம் காணக்கூடிய வகையிலும் அதற்கான திட்டத்தை அவர்களே தேர்ந்தெடுத்து செயற்திறன் மிக்கதாக

முழுமையாக பன்முகப்படுத்தலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷவின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டம் நிதியமைச்சர் பெசில்

ராஜபக்சவினால் வகுக்கப்பட்டு அவரது வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply