வேரஹெர பகுதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து
வேரஹெர, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அண்மையில் இடம்பெற்ற பயங்கர விபத்து சிசிடிவி கெமராவில் பதிவாகி இருந்தது.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த பலர் சம்பந்தப்பட்ட மண்டபத்தில் அமர்ந்திருந்த போது திடீரென அவர்கள் அமர்ந்திருந்த மண்டபத்தின் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது.
சாரதி பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமான குறித்த காரை, அன்றைய தினம் சாரதி பயிற்சிக்கு வந்திருந்த ஒருவர் செலுத்தி வந்தது பின்னர் தெரியவந்துள்ளது.
குறித்த நபருடன் பயிற்சியாளரும் காரில் இருந்ததாகக் கூறப்படுகிறது.