நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக,
நீர்கொழும்பு கட்டுவ புவகவத்தை பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மேற்படி பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் ‘தெபா எல’ வாவியில், சட்டவிரோதமாக
தனிநபர் ஒருவர் கட்டி வரும் பாலம் ஒன்றின் காரணமாக தற்போது இந்த நிலை
ஏறபட்டுள்ளதாகவும் பாலத்தின் கீழ குப்பைகள் சேர்ந்துள்ளதன் காரணமாக,
நீரோட்டம் தடைப்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகுமென, பிரதேசவாசிகள் குற்றஞ்சான்றுகின்றனர்.
ஐந்து வீடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய வீடுகளில்
உள்ளவர்கள் மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக, வெளியில் செல்ல முடியாத நிலை எற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் எனைய வீடுகளும் பாதிக்கப்படும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்