வெலிக்கடை சிறைச்சாலை மோதல்

Spread the love

வெலிக்கடை சிறைச்சாலை மோதல்

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற

துப்பாக்கிச்சூட்டில் கைதிகள்உயிரிழந்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(12) அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த 6ஆம் திகதி குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்த நிலையில், இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன

ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

இந்தப் சம்பவம் தொடர்பில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பொலிஸ்

பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

    Leave a Reply