வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை தொடக்கம்
மீண்டும் ஆரம்பிப்போம்- வீதி ஒழுக்கங்களை” என்ற தொனிப்பொருளின் கீழ், நாளை (14) தொடக்கம் வீதி ஒழுங்கைச்
சட்டம் கடைபிடிக்கப்படவுள்ளதென, போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
நாளை தொடக்கம் 16ஆம் திகதி வரை காலை 6 மணியிலிருந்து காலை 10 மணிவரைமேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட
வீதிகளில் இந்த வீதி ஒழுங்கு சட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியின், பொல்துவ சுற்றுவட்ட வீதி தொடக்கம் ஹோர்ட்டன் பிளேஸ் வரை, பேஸ்லைன் வீதியில், களணி பாலத்திலிருந்து ஹைலெவல் வீதி சுற்றுவட்டம்
வரை,ஹைலெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, பித்தளை சந்தி, ஸ்ரீ சம்புத ஜயந்தி மாவத்த, தும்புளை சந்தி, தேர்தஸ்டன் கல்லூரி, மார்கஸ் பெர்ணான்டோ வீதி, பொது
நூலகம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த வரை, காலி வீதியில் வில்லியம் சந்தியில் ஆரம்பித்து, தெஹிவளை, காலி வீதி
சுற்றுவட்டம் வரையான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் செய்றபடுத்தப்படவுள்ளது