விபத்தில் சிக்கிய மாட்டு லொறி – சிக்கிய திருடர்கள்
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியதில்,
லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து, தியத்தலாவை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை- வல்கவெல பகுதியிலேயே நேற்று (5) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான
லொறியிலிருந்து 16 கால்நடைகளும் வெள்ளவாயவிலிருந்து
நுவரெலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட போதே, விபத்துக்குள்ளாகியுள்ளது.