விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்

Spread the love

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.

விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ’தலைவி’ படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை’ என்று கூறி கண் கலங்கினார்.

இயக்குனர் விஜய் – கங்கனா ரணாவத்

’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் நடிகை கங்கனா

ரணாவத்திற்கு ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Leave a Reply