விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் -கைகள் முறிப்பு -ஸ்ரீதரன் எம்பி -வீடியோ
விசுவமடுவில் சிங்கள இராணுவத்தினர் இருவருக்கு கைகளை முறிக்க பட்ட நிலையில் அவர்கள் தர்மபுரம் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளார்கள் .
மேலும் விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் தமிழர்களை தாக்கிட தயார் நிலையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீரும் சிறுத்தை சிறிதரன் எம்பி அவர்கள் சம்பவ இடத்தில நின்றவாறு கருத்தை தெரிவித்துளளார்.
அங்கு போத்தல்கள் உடைக்க பட்டுள்ளதாகவும் ,கடைகள் அடித்து பூட்ட பட்டு மக்களை அச்சுறுத்தும் செயல் நகர்வில் சிங்கள இராணுவம் ஏவிவிட பட்டுள்ளதாக பார்க்க படுகிறது.
எவ்வேளையும் தமிழர்கள் மீது விசுவமடுவில் பொல்லுகளுடன் இராணுவம் தாக்குதலை நடத்தி அதனை இன மோதலாக்கி மாற்றிடவும் ,கலவரத்தை தூண்டி விடவும் சிங்கள இராணுவம் சூழ்ச்சிகளை செய்து வருவதாக ஸ்ரீதரன் எம்பி குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள இராணுவத்தின் இந்த சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.