வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்

Spread the love

வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்

வவுனியா தமிழர் கலாசார பண்பாட்டுடன் தொடர்புடைய ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாநகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் இ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாடலை வவுனியா பிரமாண்டு வித்தியாலய மாணவர்கள் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றதுடன், ஆடிக்கூழும் வழங்கப்பட்டது.

வவுனியாவில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடிப்பிறப்பும் ஆடிக் கூழும்

இந் நிகழ்வில் மாநகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.