வவுனியாவில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட அரசியல்வாதி
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் பொதுஐன பெரமுன கட்சியின் ஆதரவாளர்
ஒருவர் நேற்று (10) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த
நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லையேன
தேடிய சமயத்தில் சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை மீட்டேடுத்த அயலவர்கள் சடலத்தினை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.