வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞரின் பெற்றோர் இன்று (28.06) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வவுனியாவில் எரிந்த நிலையில் 23 வயது இளைஞனின் சடலம் மீட்பு
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அயந்தன் என்ற 23 வயது இளைஞரே சாவடைந்துள்ளார்.