வவுனியாவில் இந்திய குழுவினர்; விசா பெற இலகு வழி photo
வடமாகாண மக்களுக்கு ஆலோசனை சேவை வழங்கும் செயற்றிடத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக
குழுவினர் இன்றையதினம் (15.02) வவுனியாவிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பு வவுனியா அரிசி ஆலை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று
காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.30 வரை இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூரகத்தின் அபிவிருத்தி , விசா , கடவுச்சீட்டு போன்றவற்றின் பிரதம அதிகாரி
கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் உதவி அதிகாரி சுரேஸ்குமார் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு இந்தியன் விசா பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள
பிரச்சனைகள் , கல்வி புலமைப்பரிசில் , வவுனியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளின் பிரச்சனைகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆலோசனைகள்
வழங்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாக வருகை தந்திருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தினார்கள்.