வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

Spread the love

வடக்கு வீதி இணைப்புத் திட்ட கடன் தொகைக்கான காலம் நீடிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மனம் பின்வருமாறு:

  1. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதியுடன் தொடர்புபட்ட திட்டத்திற்கான கடன் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்

  2. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கீழ் தேசிய
  3. பெருந்தெருக்கள் மற்றும் மாகாண வீதி புனரமைப்பு மற்றும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் தெரிவு
  4. செய்யப்பட்ட பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு
  5. வருகின்றன. இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 98 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுகின்றன. கடன் தொகையில் எஞ்சும் தொகைகளில் மதவாச்சி –
  6. ஹொரவப்பத்தான வீதியின் மேலதிக ஒப்பந்த பொதி 02, 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த
  7. நிர்மாணப் பணிகளுக்கான கடன் நிதி செல்லுபடியான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாகும். இதற்கு முன்னர்
  8. இதனை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு செய்ய முடியாமல் போனது. இதற்கமைவாக
  9. சம்பந்தப்பட்ட கடன் தொகைக்கான காலத்தை 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிப்பதற்காக வீதி மற்றும்
  10. பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

      Leave a Reply